இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் பணிகள் 84% நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் பணிகள் 84 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால், பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. தற்போது இடம் கையகப்படுத்தும் பணிகள் முற்றிலும் முடிவடைந்ததால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முற்றிலும் முடிவடைந்து வரும் 2026ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day